Wednesday, March 31, 2010

உங்கள் வலைப்பதிவின் அம்சங்களை சோதிக்க உதவும் இணையத்தளம் !

வலைபதிவில் எழுதுவோர் ஆகட்டும் அல்லது இணையத்தளம் வைத்திருக்கும் நபர் ஆகட்டும். அனைவருக்கும் கண்டிப்பாக நமது தளம் மக்களிடம் எவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்றும், நமது தளம் உலகில் உள்ள அனைத்து தளங்களின் அம்சங்களுடன் எவ்வளவு பொருந்தி உள்ளது என சோதித்து பார்ப்பது நாம அனைவருக்குமே மிகவும் ஆவலான ஒரு விஷயம். எனவே இந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் சோதிக்கும் வகையில் அமைந்துதான் http://www.iwebtool.com/ என்ற இணையத்தளம். நமது வலை பதிவின் தரவரிசை என்ன, நமது வலைபதிவு எவளவு நேரத்தில் திறக்கிறது என பல அம்சங்களை இங்கு நம்மால் சோதித்து பார்க்க முடிகிறது. எடுத்துகாட்டாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


படங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க !

உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள்
 நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க வேண்டும் என ஆசை உங்களுக்கு உள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என்று நீங்கள் பதில் அளித்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லைவ் லாப்ஸ் கண்டுபிடித்துள்ள "SeaDragon" என்ற நிகழ்நிலை மென்பொருள் தளத்திருக்கு. ஆம் இந்த தளத்தில் நீங்கள் ஆசை படும் அனைத்து படங்களையும் மிகவும் நுணுக்கமாக பார்க்கும் அளவுக்கு வடிவமைத்து நம்மை ஆச்சிரியம் பட வைகிறார்கள். 
எடுத்துகாட்டு வேண்டும் என கூறும் நண்பர்களுக்கு இதோ தெளிவான விளக்கத்துடன் கூடிய படங்கள். கீழ கொடுத்துள்ள படத்தை பார்த்ததும் உங்களக்கு தோன்றும் எண்ணம் என்ன?

ஏதோ விண்வெளியில் உள்ள நட்சத்திரம் போன்றும், அல்லது பூமியை நோக்கி வரும் விண் கல் போன்றும் உங்களக்கு தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்று "SeaDragon"இல் பார்த்த போது எனது புருவங்கள் தானாக உயர்ந்தது. புரியவில்லையா, இதோ இந்த படத்தில் உள்ளது இதுதான்,
 ஆம் முதல் படத்தில் உள்ள அனைத்து வண்ணங்களின் பெயர்களையும் வாசகமாக எழுதியதின் விளைவுதான் நமக்கு கிடைத்த இந்த படம். மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்!

Monday, March 29, 2010

20 MB 'ற்கும் மேல் இருக்கும் கோப்பினை இணைய அஞ்சலில் அனுப்ப.

ஏற்கனேவே எனது முந்தையே பதிவில் எப்படி 1 GB மேல் இருக்கும் கோப்பினை அஞ்சலில் அனுப்ப பண்டோ (Pando )  என்ற மென்பொருள் எப்படி உதவுகிறது என்பதை  பற்றி கூறி இருந்தேன். ஆனால் நமக்கு மென்பொருள் தேவை படாமல் அஞ்சலில் கோப்பினை அனுப்ப நமக்கு வழி வகுக்கிறது "YouSendIt" என்ற இணையத்தளம். இந்த தளத்தில் நாம் அதிகபட்சமாக 100  MB வரையிலான கோப்பினை எந்தவொரு மென்பொருள் இல்லாமலேயே நம்மால் இணைய அஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடிகிறது. முயற்சி செய்து பாருங்கள்.

Saturday, March 27, 2010

டிவிட்டரில் கோப்பினை பகிர்ந்து கொள்ள உதவும் FILETWT

உலகில் உள்ள அனைத்து விசயங்களையும் கூகிள் என்ற ஜாம்பவானிடம் போட்டி போட்டு கொண்டு இப்பொது இணையத்தில் கலக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் தான் டிவிட்டர் என்று என்ற பல வல்லுனர்களும், கணிணி மேதைகளும் பெருமை அடைந்து வருகின்றனர். இதை மேலும் தெளிவு பருதுவது போல் இப்போது டிவிட்டரில் வந்திருக்கும் புதியதொரு சேவை தான் கோப்பினை டிவிட்டரில் பகிர்வது. பெரும்பாலும் நாம் இணைய அஞ்சல் முகவரி வைத்து செய்யும் முதல் வேலை நமது எண்ணங்களையும், பல தகவல்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான். இந்த செயலை எளிது படுத்தியதன் விளைவுதான் டிவிட்டரின் அபார வளர்ச்சி. நாம் இணைய அஞ்சல் முகவரினை கொண்டு செய்யும் மற்றொரு காரியம் கோப்பினை பகிர்ந்து கொள்வது. இதை ஏன் டிவிட்டரில் முயற்சிக்க கூடாது என எண்ணியதன் விளைவுதான் FileTWT என்ற இணைய சேவை உருவானதின் கதை. (ஏற்கனவே நாம் வீடியோ மூலம் ட்வீட் செயலாம் - http://ipadiku.blogspot.com/2010/02/bubble-tweet.html)
இந்த சேவையின் மூலம் நாம் நமது கோப்பினை மற்றொரு டிவிட்டர் நண்பரிடம் எளிதாக பகிர்ந்து கொள்ள நமக்கு உதவுகிறது. இவர்கள் கோப்பு பகிர்வினை டிவிட்டரில் மிகவும் எளிதுப்படுத்தி உள்ளனர். நாம் நமது டிவிட்டர் கணக்கின் மூலம் இதில் புகுபதி (Login) செய்து நமது கோப்பினை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது கோப்பு நமது அனைத்து டிவிட்டர் நண்பர்களுக்கும் தெரியும். இதை குறிப்பிட்ட ஒரு நண்பருக்கு மட்டும் அனுப்ப இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். இந்த சேவையும் நமக்கு இலவசம். FileTwt தளத்திருக்கு செல்ல இங்கே சொடுக்குவும்.   உறுபின்னரனால் நமக்கு கிடைக்கும் அம்சங்கள் கீழ் வருமாறு:


1 GB அளவிலான கோப்பினை மெயில்'ல் எளிதாக அனுப்ப !


இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக தங்களுக்கு என ஒரு சொந்தமான இணைய அஞ்சல் முகவரி வைத்திருப்போம். ஒவ்வொரு அஞ்சல் இணைய வழங்கிகளின் சிறப்பிற்கு ஏற்ப நாம் நமக்கு தேவையான அஞ்சல் வழங்கிகளை தேர்ந்து எடுத்து உபயோகித்து வருகிறோம். ஆனால் அனைத்து  இணைய வழங்கியிலும் நாம் சந்திக்கும் பெரும் பிரச்னை 20  MB 'க்கும் பெரிதான கோப்பினை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த பிரச்சனைக்கான தீர்வினை இதுவரை எந்தவொரு பெரிய இணைய அஞ்சல் வழங்கியும் தரவில்லை என்பதுதான் உண்மை. இதை நன்கு உணர்ந்த பல நிறுவனங்கள் பெரிய அளவிலான அஞ்சல்  கோப்பு பகிர்வனை நமக்கு தந்து வருகிறது. அதில் மிகவும் பிரபலம் அடைந்து வருவது பண்டோ (Pando ) என்ற மென்பொருள். 
இந்த மென்பொருளின் மூலம் நாம் 1 GB அளவில்லான கோப்பினை நாம் நமது அஞ்சல் முகவரிக்கோ, நமது நண்பர்களின் அஞ்சல் முகவரிக்கோ எளிதில் அனுப்பலாம் என்பதுதான் இதன் முதல் சிறப்பம்சம். பண்டோ இணையதள முகவரிக்கு சென்று அதன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணிணியில் உள்ள எந்தவொரு கோப்பினையும் அல்லது நேரடியாக கொப்புரைகலையே (Folders) அனுப்பி கொள்ளலாம். இந்த சேவை நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இதன் premium வெர்சனை பெற்று கொண்டால் நீங்கள் 4  GB அளவிலான கோப்பினை கூட பகிர்ந்து கொள்ளலாம். 
இதன் இணையத்தளத்தில் பண்டோ'வின் சிறப்பம்சமாக தெரிவித்திருக்கும் அம்சங்கள் கீழ் வருமாறு: 
  • Publish downloadable videos, photos and audio to any web site
  • Email files and folders up to 1GB
  • Use your existing email, no registration required
  • Know if your files are downloaded and how often
  • No need to be online when recipients download
  • No compression, FTP or flaky web uploads
  • IM links to your files or entire folders to any IM buddy

Tuesday, March 23, 2010

இணைய அனுபவத்தை Firefox'ல் எளிதாக்கும் "Foxtab"

இணையத்தில் உலவும் அனைவரும் கண்டிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 20 - 25 இணைய முகவரிக்கு சென்று தகவல்களை பெறுவோம். சில சமயம் நம்மை அறியாமலே மிகவும் ஆர்வத்துடன் பல நல்ல தளங்களுக்கு சென்று இருப்போம். சில தளங்களில் உள்ள நல்ல விஷயங்கள் காரணமாக அதை நமது ப்ரௌசெரில் Bookmark செய்து வைத்து கொள்வோம். இதனால் சில சமயங்களில் நமது புக்மார்க்கில் நம்மை அறியாமலே பல இணைய முகவரிகள் சில நாட்களிலே குவிந்து விடும். பின்பு ஒவ்வொரு முகவரியாக சென்று பார்த்து அது நமக்கு இப்பொது உபயோகம் ஆகிறதா என்று பார்போம். இதனால் நமது நேரம் மிகவும் செலவு ஆகும். இது ஒரு பிரச்னை என்றால், அடுத்த பிரச்னை நாம் ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களில் உலவி கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் ப்ரௌசெரை முடி விடுவோம். இதனால் அனைத்து தளங்களையும் நாம் பிரௌசரின் வரலாற்றில்  (History) இருந்து எடுப்போம். இதுவும் ஒரு அசௌகரியமான வேலை. எனவே நமது இணைய அனுபவத்தை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சேவைதான் FoxTab. 
இந்த சேவையை Firefox ப்ரௌசெரில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சேவையின் மூலம் நமது ப்ரௌசெர் வரலாற்றை 3-D அனுபவத்தை கொண்டு  இணையதளங்களை உலவலாம். இந்த சேவையை இந்த Addon லிங்கை உபயோகித்து உங்கள் firefox'இல் இணைத்து கொள்ளுங்கள். மேலும் இந்த சேவையை பற்றி அறிந்து கொள்ள http://www.foxtab.com/gettingstarted/ தளத்திருக்கு செல்லவும்.

Monday, March 22, 2010

உங்கள் அலைபேசிக்கு தேவையான அனைத்து விசயங்களும் ஒரே இடத்தில்!

இந்த நவீன உலகத்தில் நமது அன்றாட வாழ்கையில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட பல சாதனங்களில் குறிபிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது அலைபேசிகள். நம்முடன் அனைத்து இடங்களுக்கும்  துணை போல வரும் அலைபேசிகள் நம்மை நமது உறவுகளுடனும், நண்பர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருக்க உதவி புரிகிறது. அத்தகைய அலைபேசிகளின் மீது நம்மில் பலருக்கும் தீராத ஆர்வம் இருக்கும். அதுவும் நமது அலைபேசிகளின் முகப்பு படங்களையும், நமக்கு பிடித்த அழைப்பு ஒலிகளையும் நாம் அடிக்கடி நமது எண்ணதிருக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டே இருப்போம். இதை செய்ய கண்டிப்பாக நாம் தேடி செல்லும் முதல் இடம் கூகிள். 
அங்கு நமக்கு வேண்டிய அனைத்து விசயங்களும் நமக்கு பிடித்த வகையில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதை நிவர்த்தி செய்ய நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான இடம்தான் ZEDGE.  இந்த தளத்தில் நமது அலைபேசிக்கு வேண்டிய அனைத்து விசயங்களும், அதாவது படங்கள் வீடியோகள் , தீம்ஸ், விளையாட்டுகள் என சகல விசயங்களும் நமது அலைபேசியின் அங்கத்தை பொறுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதில் நீங்கள் உறுப்பினராக மாறிவிட்டால் இன்னும் கூடுதல் சலுகைகள். இந்த சேவை முற்றிலும் இலவசம். இந்த தளத்தை ஒரு முறை சென்று பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். 

Sunday, March 21, 2010

பிளாக்கர் பதிவுகளை டிவிட்டரில் இணைக்க.

டிவிட்டர் என்ற வழிமுறை வந்ததில் இருந்தே 
அதன் வளர்ச்சியும், அது மக்கள் இடத்தில பெற்றிருக்கும் வரவேற்பும் நாம் கற்பனையில் கூட எதிர்பார்க்காத ஓர் அபாரமான நிகழ்வு. இதை மனதில் வைத்து தான் இப்பொது எல்லாம் பதிவுலகில் பதிவுகளை எழுதும் அனைத்து நண்பர்களும் தங்களது பதிவுக்கான அங்கிகாரத்தையும், அதை மக்களிடம் விரைவாகவும், பலரிடமும் எடுத்த செல்ல டிவிட்டேரை உபயோகம் செய்ய தொடங்கிவிட்டனர். எனவே நமது பதிவுகளையும் டிவிட்டரில் பதிய வைக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை இந்த பதிவில் அளித்துள்ளேன். 
01 . இந்த விசயத்தை உங்கள் வலைபதிவில் நிறுவ முதலில் உங்களக்கு  டிவிட்டரில் ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
02 . பின்பு உங்கள் பிளாக்கரின் டாஷ்போர்டு (Dashboard) சென்று கொள்ளுங்கள். அங்கே Layout , Edit HTML சென்று தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
03 . கீழே உங்கள் பிளாக்கின் வார்ப்புரு நிரல் கிடைக்கும். அதில் " data:post.body/ " என்பதனை தேடுங்கள். அதன் கீழே கீழ்காணும் வரிகளை (Script) இணைத்து விடுங்கள்.
<script type="text/javascript">
tweetmeme_url = &#39;<data:post.url/>&#39;;
</script>
<script src="http://tweetmeme.com/i/scripts/button.js" type="text/javascript">
</script> 
4. இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள்.
05 . இப்போது உங்களின் அனைத்து பதிவுகளின் அருகே டிவிட்டேரின் 
சின்னம் தோன்றும்.(கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்)
06 .அதை சொடுக்கி உங்களின் டிவிட்டரில்,
அந்த பதிவின் கருத்தைபதித்து(Tweet) கொள்ளுங்கள். 

Thursday, March 18, 2010

டெஸ்க்டாப் வால்பெபெர்ஸ் (Desktop Wallpapers) எடுக்க சிறந்த தளங்கள்.

கணிணியில் வேலை பார்க்கும் அனைவரும் குறைந்தது ஒரு நாளைக்கு 2 - 3 தடவையாவது தங்களது Desktop Wallpaper'ஐ தங்களது மன நிலையை பொறுத்து மாற்றி கொண்டு இருப்பார்கள். அப்போது அவர்கள் ஒவ்வொரு முறையும் கூகிள் செய்து தங்களக்கு பிடித்த படங்களை தரவிறக்கம் செய்து கொள்வார்கள். ஆனால் அப்போது அவர்கள் சந்திக்கும் முதல் பிரச்னை "Water mark". அதாவது நாம் எடுக்கும் படங்களில் எதோ ஒரு மூலையில் அதன் உரிமையாளர் தனது பெயரை லோகோவாக பதித்து இருப்பார். இரண்டாவது பிரச்னை நமது கணிணியின் அளவிருக்கு (Resolution) கிடைக்குமா என்பது சந்தகேமே. இந்த பிரிச்சனை எல்லாம் இல்லாமல் உயர்தர  Wallpaer'ஐ தரவிறக்கம் செய்ய சிறந்த 5 தளங்களை இந்த பதிவில் அளித்துள்ளேன். கண்டிப்பாக ஒவ்வொரு தளத்தில் இருக்கும் படங்களும் நமக்கு பிடித்தவாறும், சிறந்ததாகவும் இருக்கிறது. இந்த வலைதளங்களின் உரிமையாளர்களின் கற்பனை வளம் கண்டிப்பாக உங்களை வியக்க செய்யும். இதோ எனது பார்வையில் முதல் 5 சிறந்த வலை தளங்கள். (லோகோவினை சொடுக்கி அந்தந்த தளங்களுக்கு செல்லவும்)


Wednesday, March 17, 2010

சமூக வலைத்தளங்களை நொடியில் உங்கள் பிரௌசரில் கிளிக்க !

ஒரு நாளைக்கு குறைந்தது 2 - 3  மணி நேரங்கள் சமூக வலைதளங்களில் செய்திகளையும், நண்பர்களுடன் கருத்தகளையும் பகிர்ந்து கொள்ளும் நபரா நீங்கள் ? அப்படி என்றால் இந்தப்பதிவு உங்களக்குதான். இப்போது எல்லாம் குறைந்தது ஒருவர்க்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகள் இருக்கிறதோ இல்லையோ, இணையத்தில் உலவும் ஒவ்வொரு இணையனும்  (இணையத்தில் உலவும் இளைஞன்) Orkut, Facebook, Twitter, Linkedin, Flickr என எண்ணில் அடங்கா கணக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்து கொண்டு இருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது ஒவ்வொரு சமூக வலைதலங்களுக்கும் செல்ல தங்களது உலாவியில் (Browser) ஒவ்வொரு தளத்தையும் தனி தனியே பார்க்க வேண்டி இருக்கும். சில சமயம் ஒரு சமூக தளத்தில் அவர்களுக்கு Updates இருக்கும், சிலவற்றில்  இருக்காது. எனவே ஒவ்வொரு முறையும் அனைத்து தளங்களையும் பார்ப்பது என்பது சலிப்பு தட்டும். இதற்கு தீர்வாக உங்களது அனைத்து சமுக தளங்களும் உங்கள் உலாவியிலே இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களக்கு Updates வந்தால் அதை சுட்டி காட்டினால் இன்னும் எவ்வளவு வசதியாக இருக்கும்.

இதோ இதற்கான வழிமுறைகள் இந்த பதிவில் பட்டியல் இடப்பட்டுள்ளன. 

01 . டிவிட்டரை உங்கள் உலாவியில் நிறுவ: இப்போது எல்லாம் நாம் உலகத்தில் நடக்கும் பல செய்திகளை , கூகிள்ஐ விட டிவிட்டரில் தான் நிறைய தெரிந்து கொள்கிறோம். அந்த அளவிருக்கு டிவிட்டர் இப்போது அனைத்து தரப்பிலும் பிரபலம் அடைந்து வருகிறது. (டிவிட்டரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://ipadiku.blogspot.com/2010/02/tweets-tweeples-people-in-twitter.html , http://ipadiku.blogspot.com/2010/02/blog-post.html ). டிவிட்டரை உங்கள் உலாவியில் நிறுவ இந்த லிங்கில் உள்ள Add-On'ஐ சொடுக்குங்கள். 

02 .  முகபுத்தகத்தை (அதாங்க FaceBook!) உங்கள் உலாவியில் நிறுவ:  Orkut'ஐ அடித்து துவம்சம் செய்து விட்டு இப்போது இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வரும் ஒரு சமுக வலைத்தளம். அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் சுமார் 4 மில்லியன் பயனிட்டர்களை கொண்டுள்ள வலை தளம் Facebook என்பது ஒன்றே போதும் அதன் வெற்றியை பற்றி சொல்ல.  அதை உங்கள் உலாவியில் நிறுவ இங்கு உள்ள லிங்கில் இருக்கும் Add on'ஐ சொடுக்கவும்.

03 . G-Mail'ஐ உங்கள் உலாவியில் நிறுவ: இப்பொது இணையத்தில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இருக்கும் பொதுவான ஒற்றுமை g-மெயில் முகவரிதான். நமக்கு வரும் அனைத்து கடிதங்களையும் வாசிக்கும் ஒரு பொதுவான அமைப்பு   G-மெயில் . அதை உங்கள் உலாவியில் நிறுவ இங்கு உள்ள லிங்கில் இருக்கும் Add on'ஐ சொடுக்கவும். 

இவை அனைத்தையும் நிறுவி உங்கள் நேரத்தையும், செயலையும் எளிது ஆக்குங்கள்.

Saturday, March 13, 2010

காப்பி பேஸ்ட்'ஐ (Copy + Paste) சுலபமாக்கும் டேரா காப்பி (TeraCopy)

Copy + Paste என்ற வார்த்தைகளை கணிணி உபயோகம் செய்யும் அனைவரும் தினமும் கேட்கவும், செய்யவும் கூடிய ஒரு முக்கியமான செயல். நாம் நமது கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை பறிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் நாம் தேர்ந்து எடுக்கும் முறை "காப்பி பேஸ்ட்". பல சமயங்களில் நாம் GB கணக்கிலான கோப்புகளை பறிமாற்றம் செய்யும் போது குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அந்த சமயத்தில் நாம் கணிணியில் வேறதும் செயல்களை செய்தல் கண்டிப்பாக கணிணி ஹங்(Hang) ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இது எல்லாம் போதாது என்று, நாம் இவ்வளவு நேரம் காத்திருந்தும் நாம் பறிமாற்றம் செய்த கோப்புகள் பாதியில் நின்று விடலாம். எனவே இந்த பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் தீர்க்க வந்த மென்பொருள் தான் டேரா காப்பி. இந்த மென்பொருள் பல மணி நேரங்கள் எடுத்து கொள்ளும்  காப்பி பேஸ்ட்'ஐ சில மணி துளிகளில் முடித்து விடுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த காப்பி பேஸ்ட் வேலை முடியும் வரை நாம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமது கணிணியில் மற்ற வேலைகளை தடை இல்லாமல் செய்யலாம். நமக்கு இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை இங்கே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக நமது கணிணியில் இருக்க வேண்டியே மென்பொருள் இது.

உங்கள் கணிணியின் டெஸ்க்டாபை (Desktop) கச்சிதமாக வடிவமைக்க !

கணிணியில் அன்றாடம் வேலை பார்க்கும் அனைவரும், நாம் வேலை பார்த்து வைத்த கோப்பினை நமக்கு ஏதுவான இடத்தில், விரைவாக எடுத்து மறு நாள் வேலை பார்க்கும் வகையில் நமது கணினியின் டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்போம். ஏதேனும் சிறிய வேலை என்றால் ஒன்றோ, இரண்டோ என்றோ சொற்ப நிலையில் கோப்பினை சேமித்து வைப்போம். இதுவே வரைகலை (Animation) அல்லது மென்பொருள் சார்பாக வேலை என்றால் கண்டிப்பாக குறைந்தது 10 - 15 கோப்புகளை நமது டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்போம். இந்த நிலைமையில் நமது டெஸ்க்டாப்பில் நிறைய கோப்புகள் சேர்ந்து பார்பதற்கும், நமது சரியான கோப்பினை தேர்ந்து எடுக்கும் வேலையே மிகவும் கடினம் ஆகி விடும் என்பது மிகவும் உண்மை. எனவே இந்த பிரச்சனையை சுலபாமாக தீர்க்க நமக்கு உதவுகிறது "Fences" என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தரவிறக்கம் செய்து முடித்தவுடன் உங்கள் கணிணியில் அதை நிறுவி கொள்ளுங்கள். இப்பொது உங்களக்கு ஏற்ற கோப்பினை அழகாக எந்த இடத்தில் வேண்டுமோ அங்கே நிரப்பி கொள்ளுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இரண்டு முறை சொடுக்கினால் அனைத்து கோப்புகளும் தெரியும். மீண்டும்  இரண்டு முறை சொடுக்கினால் அனைத்து கோப்புகளும்மறைந்து விடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்களது கணினிக்கு புதிய பொலிவினை தரும் என்பது உறுதி. 
 இதை பற்றிய பல தகவல்களை இங்கே காணலாம்: http://www.stardock.com/products/Fences/screenshots.asp 



Tuesday, March 9, 2010

வலைப்பதிவில் எழுதுவதால் கிடைக்கும் முக்கியமான 4 பயன்கள்:

நாம் அனைவரும் நம்மை பதிவுலகில் சேர்த்து கொண்டு நமது கருத்துகளை பிறரிடம் பகிர்ந்து கொள்கிறோம். நாம் நமது பதிவிற்கு நிறைய நபர்கள் வந்து செல்ல வேண்டும், நிறைய பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என  நிறைய ஆசைகள் வைத்து எழுதுகிறோம். . ஆனால் என்னை பொறுத்த வரையில் நமது ஆசைகள் எதுவாயினும் நாம் நமது எழுத்தின் மேல் உள்ள பற்றின் காரணமாக  எழுத வேண்டும். நான் மிகவும் ரசிக்கும் cybersimman'in வலை பதிவில் அவர் தான் வலைபதிவில் எழுதும் நோக்கத்தை இவ்வாறு கூறி இருப்பார். 
"இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்."
என்ன ஒரு உயர்ந்த எண்ணம். இதை மனதில் கொண்டுதான் நான் எனது வலை பதிவில் பதிவுகளை எழுதுகிறேன். சரி, நண்பர்களே இந்த பதிவின் கருத்துக்கு வருவோம். என்னை பொறுத்த வரையில் வலைப்பதிவில் எழுதுவதால் கிடைக்கும் முக்கியமான பயன்களை இங்கு கொடுத்து உள்ளேன்: 
01. புது விசயங்களை தெரிந்து கொள்ளலாம்: நாம் பதிவில் எழுத எழுத நமது எண்ணங்களில் புதிய யோசனைகள் உதித்து கொண்டே இருக்கும். சில நேரம் நமக்கு எந்தவொரு யோசனையும் வராத நிலையில் நாம் இணையத்தில் புதிய விசயங்களை தேடி கண்டுபிடித்து எழுதுவோம். இதன் மூலம் நமக்கு நிறைய புதிய விஷயங்கள் தெரிய வருகிறது.
02. எழுத்தாற்றல் ஓங்குகிறது: நாம் பதிவில் விசயங்களை வெளிக்கொணரும் போது நமது மொழி வளமும். நமது எழுத்து ஆற்றலும் மேலும் சிறப்பாக மாறுகிறது.
03. கற்பனை வளம் கூடுகிறது: நாம் ஒரு விசயத்தை தெரிந்தவுடன் அதை இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறோம். ஏற்கனவே அந்த விஷயம் பலருக்கு தெரிந்து இருந்தாலும், நாம் நமது கற்பனை மூலம் அதை வேறு விதமாக பதிவிடுகிறோம். இதனால் நமது கற்பனை திறன் செழுமை அடையும்.
04. நட்புலகம் விரிவு அடைகிறது: நாம் நமது பதிவின் மூலம் பல நண்பர்களை பெற முடியும். இதன் மூலம் அவர்களது கருத்தையும் நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கிறது. நல்ல நட்பு பதிவுலகத்திலும் கிடைக்க நமக்கு பதிவுகள் வாய்பினை ஏற்படுத்தி தருகிறது.

 

உங்கள் வலைப்பதிவை நொடியில் டிசைன் செய்ய..

இணையத்தில் நாம் ஒரு வலைபதிவையோ, இணைய பக்கத்தையோ டிசைன் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது நமக்கு HTML கோடிங்காவது தெரிய வேண்டும் என்பது எழுத படாத ஒரு விதி. ஆனால் நம் அனைவருக்கும் இணையத்தில் நமக்கு தெரிந்த விசயங்களை வலைபதிவிலோ, இணைய பக்கங்களிலோ மற்றவருக்கு எடுத்து செல்ல வேண்டும் என ஆசை படுவோம். ஆனால் கோடிங் தெரியாத காரணத்தால் ஏதாவது ஒரு டிசைனை எடுத்து நமது விஷயங்களை பகிர்வோம். சில சமயம் நமது பக்கத்தின் டிசைன் பிறர் பார்த்தவுடன் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறொரு பக்கத்துக்கு சென்று விடுவார்கள். இதோ இந்த குறையை போக்க நமக்கு புதியதொரு மென்பொருளை அறிமுகம் செய்து உள்ளனர் http://www.stiqr.com/ என்ற நிறுவனம். கோடிங், கோடிங் (Coding ) என இருந்த நிலைமையை இவர்கள் தலைகீழாக புரட்டி போட்டு உள்ளனர். "No Code, Just Stick It" என கூறி தங்கள் வலை பக்கத்துக்கு அழைகின்றனர். சரி, ஒருமுறை பாப்போம் என எண்ணி முயிற்சிதேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கிறது. அவர்கள் டிசைன் செய்த வலைப்பதிவை இங்கே பார்க்கலாம். இது போல் நம் வலைபதிவையும் சுவாரசியமாக மாற்ற நினைக்கும் நண்பர்களுக்கு இதோ இதன் வழிமுறை.

01 . முதலில் உங்கள் வலைப்பதிவின் "Edit Html" பக்கத்துக்கு சென்று அங்கே உள்ள HTML கோடில் "/body" என்ற வார்த்தையை தேடவும்.


02 . தேடியப்பின் கீழ உள்ள லிங்கில் சொல்லியது போல் செய்யவும். அங்கே கொடுக்கப்பட்டுள்ள Code'ஐ "/body" என்பதருக்கு முன்பு ஒட்டவும்.

http://www.stiqr.com/start

03. Save செய்து விட்டு உங்கள் வலைபதிவிற்கு சென்று Shift +F2 'ஐ அமுக்கவும். உங்களது இ-மெயில் முகவரியையும் , உங்களுக்கான ரகசிய குறியிட்டு சொல்லையும் தேர்ந்தெடுக்கவும்.

04 . நீங்கள் இப்பொது உங்கள் வலைப்பதிவை டிசைன் செய்ய ஆயுத்தம் ஆகலாம்.

05 . இந்த சேவை நமக்கு இலவசமாக கிடைக்கிறது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் நண்பர்களே, விவாதிப்போம்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை சொடுக்கவும்.

http://www.youtube.com/watch?v=B-ff53t8TuU&feature=player_embedded#






Monday, March 8, 2010

ஆஸ்கார்'ல் கவனம் ஈர்த்த கணிணி அனிமேஷன் படங்கள்.

இதோ முடிந்து விட்டது 82 வது ஆஸ்கார் திருவிழா. பெரிதும் எதிர்பார்கபட்ட அவதார் வெறும் 3 விருதுகள்தான் பெற்றது. ஆனால் "ஹுர்ட் லாக்கர்" (Hurt Locker) 6  விருதுகளை பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது. ஆனால் நான் பெருதும் ரசித்த விருதுகள் சிறந்த கணிணி அனிமேஷன் குறும்படங்கள்.(Short Film Animated). இந்த முறை 5 படங்கள் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட நிலையில் சிறந்த படமாக லோகோரமா (Logorama) விருதை தட்டி பறித்தது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள அனைத்து பொருள்களின் விளம்பர அடையாளங்களை(Logo) வைத்து அனிமேஷன் செய்து உள்ளனர். வெறும் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை உருவாக்க எடுத்து கொண்ட காலம் 6 வருடங்கள் என அறிந்த போது வியப்பாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்காக அந்த படமும் மற்றும் விருதுக்கு பரிந்துரைக்கபட்ட மற்ற படங்களின் வீடியோ லிங்குகள் இங்கே :
A Matter of Loaf and Death: http://megavideo.com/?v=6XYBYCK2
The lady and the Reaper: http://megavideo.com/?v=U5JMZKK0
Granny O'Grimm's Sleeping Beauty: http://megavideo.com/?v=3TBN1U47







மற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.

நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6  வலைபதிவுகளுக்கு சென்று நம் மனதிற்கு பிடித்த விசயத்தை படிப்போம். அதுவும் கண்டிப்பாக தொழில்நுட்பம் அல்லது சினிமா பற்றிய வலைபதிவுகளுக்கு நிச்சயம் நமது கணிணியில் இடம் கொடுப்போம். அப்போது நாம் விசயத்தை படித்துவிட்டு  அவர்களுக்கு பின்னூட்டம் இடாமலேயே வந்து விடுவோம். நேரம் இன்மை காரணமாக அந்த பதிவில் இருந்து வேறு ஒரு பதிவிருக்கு தாவி விடுவோம். அப்படி செய்யாமல் நாம் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டம் இடுவதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான 5 பயன்களை பற்றி பார்போம். 
01 . ஒவ்வொரு பதிவரின் எழுத்துக்கு அங்கீகாரம்: ஒவ்வொரு பதிவையும் எழுதும் முன்பு அந்த விசயத்திற்காக பதிவர்கள் கண்டிப்பாக மெனகெடுவார்கள். தங்களது வாசகர்களுக்காக நல்ல செய்தியை தரமுடனும், எளிமையாகவும் எடுத்து கூற ஆசை பட்டு தங்களது வலை பதிவில் செய்தியை பதிப்பார்கள். நீங்கள் பின்னூட்டம் இடுவதால் அவர்கள் தங்கள் பதிவுக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக நினைத்து இன்னும் நல்ல விசயங்களை நமக்கு கொடுப்பார்கள்.
02 .உங்கள் வலைப்பதிவின் Traffic 'ஐ அதிகரிக்க : நாம் மற்ற பதிவிர்களின் பதிவில் பின்னூட்டம் இடுவதன் மூலம் அந்த பதிவர்கள் தங்களது பதிவுக்கு பின்னூட்டம் இட்ட நபர் யார் என்ற ஆவலில் நமது பதிவுக்கு வந்து செய்திகளை வாசிப்பார். இது நமது பதிவுக்கு web Traffic 'ஐ அதிகரிக்க உதவும்.
03 . கருத்து மற்றும் நட்பு பறிமாற்றம்: ஒரே வகையான விஷயங்கள் நீங்கள் எழுதியதை போலேவே பலரும் எழுதி இருக்க கூடும். அந்த சமயத்தில் உங்களின் பின்னூட்டம் மூலமாக சிறந்த கருத்துகளை விவாதிக்க அது வித்திடுகிறது. அது மட்டும் அல்லாமல் முக்கியமாக நமது நட்பு வட்டம் இன்னும் பெரியதாக அமைய வாய்ப்பு ஏற்படுகிறது.
04 .உங்கள் அடுத்த பதிவிற்கான களம்: நமக்கு வரும் பின்னூட்டம் மூலமாக பலர் பல கேள்விகளை வினவி இருப்பார்கள். எனவே அதற்கு பதில் அளிக்கும் நோக்கில் உங்கள் அடுத்த பதிவிற்கு களம் அமைகிறது.
05 . உங்கள் பெயர் பிரபலம் அடையும்: நாம் பல வலை பக்கங்களிலும்,  வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் இடுவதால் உங்கள் பெயர் அனைத்து இடங்களிலும் பரவும். கூகிள்'ல் உங்கள் பெயரை சொடுக்கினால் கண்டிப்பாக அது பல வலைப்பக்கங்களில் உங்களுக்கான முகவரியை தரும்.

Sunday, March 7, 2010

IPL 'ல் கலக்கும் FAKE IPL PLAYER . .

இதோ இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்க போகிறது IPL (Indian Premier League) . சென்ற வருடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வருடம் மீண்டும் இந்தியாவிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறது IPL . கண்டிப்பாக இந்த வருடம் மிகவும் பிரமாண்டமாகவும், செல்வ செழிபோடும் இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த முறை ஆட்டத்தில் யார் கலக்க போகிறார்களோ இல்லையோ, ஆட்டத்துக்கு வெளியே பதிவுலகத்தில் கலக்க மறுபடியும் வருவேன் ஏன் கூறி உள்ளார் "Fake IPL Player". இவரை பற்றி தெரியாதவர்களுக்கு இவரை பற்றிய சின்ன முகவுரை. தன்னை போலி IPL விளையாட்டு வீரர் என பிரகடன படுத்தும் இவர் Kolkata Knight Riders அணியை சேர்ந்த வீரர் என கூறினார். இவர் கடந்த 2009 IPL 'ல் இருந்து  Kolkata Knight Riders அணியை சேர்ந்த வீரர் என்ற பார்வையில் தனது வலைபதிவில் பல்வேறு சம்பவங்களை தொடர் முழுவதும் எழுதினர். இவரது வலைப்பதிவு ஆரம்பித்த சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானது. இவரது செய்திகள் ஒரு புறம் சர்ச்சையை ஏற்படுத்தியே போதும் இவருக்கு பலர் விசிறி ஆனார்கள். உண்மையில் இவர் யார் ? நமது இந்திய நாட்டு வீரரா அல்லது வேறு நாட்டு வீரரா இல்லை வந்ததிகளை பரப்பும் நபரா என யாருக்கும் தெரியவில்லை. இவரது வலைப்பதிவின் சில அம்சங்கள் இங்கே :
150,000 visitors   சராசரியாக 15 நிமிடங்கள் இவரது வலை பதிவில் உலாவுகின்றனர்.
போட்டிகள் நடக்கும் சமயத்தில் இவரது வலைபதிவு இந்திய அளவில் முதல் 10 இடங்களில் வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இவர் மீண்டும் இம்முறை வருவாரா வரமாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த சமயத்தில் பில்லா அஜித் போல் "I'M Back" என அறிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அவர் இந்த முறை தான் பல செய்திகளை ‘The Gamechangers’ என்ற தன் புத்தகத்தில் வெளியிட போவதாக அறிவித்துள்ளார். எது எப்படியோ IPL என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது போலும். 
 http://www.fakeiplplayer.com/
http://www.indibloggies.org/fip-interview?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+indibloggies+%28The+Indibloggies%29&utm_content=Google+Reader

தரவிறகத்தை(Download) சுலபமாக்கும் 'Mipony' மென்பொருள்

பெரும்பாலும் இணையத்தில் உலா வரும் அனைத்து நபர்களும் தங்களக்கு பிடித்தமான விசயங்களை தங்களது கணிணிக்குள் தரவிறக்கம் செய்ய ஆசை படுவார்கள். பெரும்பாலும் அவர்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகள் பல MB கணக்கிளும், ஒரே கோப்பு பல பாகங்களாக பிரித்து இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கே இருந்து நமது கோப்பை தரவிறக்க சில வினாடிகள் காத்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஒரு நாளைக்கு இவ்வளவு அளவுதான் நீங்கள் தரவிறக்கம் செய்ய முடியும் என்று விதிகள் பல இருக்கும். இவை அனைத்தையும் விட நாம் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்த உடன் நமது இணையத்தின் வேகம் குறைந்து நமக்கு சங்கடத்தை தரும். எனவே நாம் பெரும்பாலும் பெரிய அளவிலான கோப்புகளை Torrentz  எனப்படும் மென்பொருள் மூலம் தரவிர்ரகம் செய்து கொள்வோம். இரவில் தரவிறகத்தை ஆரம்பித்து வைத்துவிட்டால் காலை நமது கோப்பு தரவிறக்கம் ஆகி இருக்கும். ஆனால் பெரும்பாலும் நமக்கு தேவையான கோப்புகள் torrentz 'இல் இருக்குமா என்பது சந்தேகம். அது மட்டும் இல்லாமல் நமது கோப்பு நல்ல நிலையில் இருக்குமா என்பது மிக பெரிய கேள்வி குறி தான். எனவே இந்த பிரச்சனையை சுலபமாக்கும் மென்பொருள் தான் Mipony . இந்த மென்பொருளை இந்த லிங்கில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் உலகில் உள்ள பிரபலமான பல இணைய வழங்கியில் (Web Server) இருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் வசதி கொண்டது. இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவியயுடன் உங்களக்கு தேவையான கோப்பு எந்தவொரு இணைய வழங்கியில் (Web Server), எவ்வளவு பாகங்களாக இருந்தாலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் தரவிறக்க உதுவுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த கோப்புகள் இணைய வழங்கியில் (Web Server ) நல்ல நிலையில் உள்ளதா என்று நாம் தரவிறக்கம் செய்யும் முன்பே நமக்கு சொல்லி விடுகிறது. மேலும் சிறப்பாக இந்த மென்பொருளின் உள்ளேயே ப்ரௌசெர் (Browser) இருக்கிறது. 
 
அது மட்டும் இல்லாமல் நாம் ஒவ்வொரு முறையும் ஏதானும் லிங்கை தரவிறக்கம் செய்ய முயற்சிக்கும் போது தானகவே இந்த மென்பொருள் அந்த லிங்கை தன்னுடன் இணைத்து கொள்கிறது. இந்த மென்பொருள் கண்டிப்பாக Torrentz'க்கு மாற்றாக அமையும் வசதி கொண்டது. இந்த மென்பொருளை கடந்த 3 மாதங்களாக உபயோகித்து வருகிறேன். மிகவும் உபயோகமானதாக இருக்கிறது. இந்த மென்பொருள் பற்றி ஏதனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள். 

Thursday, March 4, 2010

உங்கள் புகைப்படம் கலைப்படமாக மாற...



நீங்கள் சில நாட்கள் முன்பு  உங்கள் நண்பர்களடோ அல்லது உங்கள் குடும்பதோடோ ஏதேனும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்கள் அல்லது உங்களது கல்லூரி, பள்ளி நாட்கள் புகை படங்களோ என நீங்கள் பொக்கிசமாக பாதுகாக்கும் படங்களை ஒரு ஆல்பம் போல் சேர்த்து வைத்து காலம் கழித்து பார்க்கும் போது நம் மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கு  அளவே இருக்காது. அதை எப்போது பார்த்தாலும் நம் மனதிற்கு இனிய சுகத்தை தரும். ஆனால் நாம் புகைப்படங்களை எடுத்து கொண்டு ஏதேனும் புகைப்பட கடைக்கு சென்றால் நமது கற்பனைக்கு ஏற்றவாறு ஆல்பத்தை அமைக்க இயலாது. அப்படி அமைத்தாலும் அதுக்கு நாம் நிறைய செலவு செய்ய வேண்டி வரும். இந்த நவீன உலகத்தில் இதை மனதில் கொண்டு ஒரு மென்பொருள் நம் புகைப்படங்களை  அழகிய ஆல்பமாக "WonderShare Photo collage" என்ற மென்ப்பொருள் மாற்றி தர உதவுகிறது. "Wondershare Photo Collage" என்ற இந்த லிங்கை உபயோகித்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் உங்களுக்கு பிடித்த ஆல்பத்தின் வடிவத்தை உபயோகித்து உங்கள் புகைப்படங்களை உங்கள் மனதிருக்கு பிடித்த வடிவத்தில் இணைத்து கொள்ளுங்கள். பின்பு என்ன அதை உங்கள் சமூக வலை பின்னல்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள்! 
இங்கு சில படங்களை "WonderShare Photo collage" மென்ப்போருளில் மாற்றிய விதத்தை அளித்துளேன். கண்டிப்பாக இந்த தளம் புகைப்பட பிரியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும்.