Saturday, April 3, 2010

என் புருவத்தை உயரவைத்த Blogger !

Gloson - எனது புருவத்தை மட்டும் அல்ல உலகில் உள்ள அனைத்து தலைச்சிறந்த பதிவர்களையும் ஆச்சரியம் பட வைத்திருக்கும் பெயர். நாம் அனைவரும் குறைந்தது நமது பத்தாவது வயதில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை அறிந்து வைத்திருப்போம். அதே போல் கண்டிப்பாக அந்த வயதில் நமக்கு இணையத்தை பற்றியோ, வலை பதிவு என்ற விசயத்தை பற்றியோ தெரிந்து இருக்க சிறிது கூட வாய்ப்புகள் கிடையாது. ஆனால் கணிணியின் பரிணாம வளர்ச்சி காரணமாகவும், இணையத்தின் அபார முனேற்றதாலும் இன்றைய தலைமுறையினர் இந்த விசயங்களில் தலைசிறந்து விளங்குகின்றனர்.அவர்கள் இந்த சிறு வயதிலேயே இவ்வளவு விசயங்களையும், இணையத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தெரிந்து வைத்திருப்பது நாளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
அந்த வகையில் என்னை ஆச்சரிய பட வைத்த ஒரு சிறுவன்(வயதில் மட்டுமே!) Gloson.
மலேசியாவில் வசிக்கும் இந்த சிறுவன் தனது பத்தாவது வயதில் இருந்து ப்ளாக் எழுதுவதாகவும், தனக்கு கவிதை எழுதவது மிகவும் பிடிக்கும் அன்றும் தனது முகப்பு பக்கத்தில் தெரிவித்து உள்ளான். சுமார் 4000 RSS சந்தாதாரர்களை பெற்று இருக்கும் இவனது ப்ளாக் டிவிட்டர், ப்ளோக்கிங், இணையம், கவிதை என பல துறைகளை அலசுகிறது. மிகவும் ரசிக்க வைக்கும் ஒரு சிறுவன். 


No comments:

Post a Comment